யாழ் அச்சுவேலி வைத்தியசாலையில் களேபரம்! வைத்தியரை தாக்கிய பொதுமக்கள்

அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.

அது தொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் கூடிய முதியவரின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரைத் தாக்கியதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த முதியவர் சுவாசப் பிரச்சினையால் அவசர சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலை அழைத்துச் சென்ற போது, மருத்துவர் சிகிச்சை வழங்குவதற்கு அக்கறை செலுத்தாது செயற்பட்டதாகவும், முதியவரை சுகாதார ஊழியர் ஒருவரே பார்வையிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து நீண்ட நேரத்துக்கு பின்னர் அங்கு வருகை தந்த மருத்துவர் முதியவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே வாக்குவாதம் ஏற்பட்டு வைத்தியமீது மீது தலைக்கவசத்தால் தாக்குதல் மேற்கொண்டதாக உயிரிழந்தத முதியவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து மருத்துவரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.