பரிதாபமாக மரணமான பல்கலைகழக மாணவி !

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியான ஒஷானி எரங்கிக்கா பிட்டவல காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

காய்ச்சல் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த மாணவி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

மாணவி பரீட்சைக்காக சென்ற நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு பிலிமதலாவையில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் அங்கிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை டெங்கு காய்ச்சல் பரவுவதன் காரணமாக, ரஜரட்ட பல்கலைக்கழகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.