இந்தியாவில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட கோவில் பூசாரி மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம் பூசாரி தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குழுவாக கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், பூசாரி மீது மிளகாய் பொடியை வீசி, துணிகளைக் கிழித்து அடித்து உதைத்து நிர்வாணமாக்கியுள்ளனர்.
A temple priest in Bhavanipuram in #Vijayawada was thrashed by women for allegedly misbehaving with one of them. They threw chilli powder on him, tore his clothes and beat him up. This cctv was obtained as part of the investigation by cops. Two cases registered. pic.twitter.com/XcCIgV0Ko4
— Paul Oommen (@Paul_Oommen) November 4, 2019
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சியை பொலிசார் பெற்றுள்ளனர். தற்போது, குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.