உணவு சமைப்பதில் மாமியாருடன் தகராறு: மருமகள் எடுத்த விபரீத முடிவு

வேலூர் மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்காரவேலன், தமிழரசி என்கிற இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்ததிலிருந்தே தமிழரசிக்கும் அவருடைய மாமியார் மாணிக்கமாளுக்கும் இடையே உணவு சமைப்பதில் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட தமிழரசி இன்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.