வவுனியாவில் ஏற்பட்ட விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

வவுனியா – இலுப்பையடி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த தாய் மற்றும் மகளை மோதியுள்ளது.

இதன்காரணமாக சிறுமி ஸ்தலத்தில் பலியானதுடன், தாயார் சிறு காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமி 09 வயதான பிரியங்கா எனத் தெரியவருகின்றது.

குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பியோட முற்பட்டபோது பொலிஸார் மற்றும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் கூடிய இளைஞர்கள் டிப்பர் வாகனத்தினை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.