தமிழர்களின் ஒற்றுமையை சிதறடித்தார் விக்கினேஸ்வரன்! வெடித்தது புதிய சிக்கல்

13 அம்ச கோரிக்கைளை ஐந்து கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமை பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம் வெளியிட்டுள்ளது.

யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

அத்துடன் 5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்து அவர்கள் ஏற்காவிடின் அதன் பின்னர் வேறு முறையில் அதனை அணுகும் முறை குறித்து கலந்துரையாடுவதாகவே முன்னர் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் 5 கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் உரையாடவில்லை என குற்றம் சுமத்திய அவர்கள் அவர்கள் தனித்தனியாக தமது முடிவை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடாக இதனை இதனை தாம் பார்ப்பதாகவும் யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.