வரிசையாக வந்து சென்ற மாப்பிள்ளைகள்: ஒருவரும் சம்மதம் சொல்லாததால் இளம்பெண் எடுத்த முடிவு!

திருமணம் நடக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருநெல்வேலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி பாஸ்கர் என்பவருடைய மகள் கிறிஸ்டி(26). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால் வந்த மாப்பிள்ளைகளில் ஒருவரும் சம்மதம் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் திருமண பேச்சு வார்த்தையும் தள்ளிப்போயுள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிறிஸ்டி, நேற்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கிறிஸ்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.