தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் நேற்று பிள்ளையான் அணியுடன் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
பால்ச்சேனை பாலசிங்கம் முரளிதரன் என்பவரே இவ்வாறு பிள்ளையான் அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு எம்.பி, சீ.யோகேஸ்வரனின் வலது கையான இவர், கட்சிக்குள் யோகேஸ்வரன் அணியாக செயற்பட்டு வந்ததாக நீண்டகாலமாக விமர்சனம் இருந்து வந்தது.
இவ்வாறான நிலையிலேயே அவர் இன்று பிள்ளையான் அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
நேற்று பகல் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை சந்தித்து விட்டு, அதன்பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தனது முடிவை அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறையில் மத்திய குழு உறுப்பினர் எல்லைக்காவலன் ஏகாம்பரம் மற்றும் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவிக்கு புதுக்குடியிருப்பை சேர்ந்த தர்மலிங்கம் நவநீதன் என்றும் நபரைக் கொண்டுவந்து சேர்ந்திருந்தார் அவரும் கோத்தபாயவிடம் சென்றுவிட்டார்.
இன்னும் பலர் செல்வதற்கு தயாராக உள்ளனர் அவர்களின் விபரங்கள் விரைவில் வெளியிடுவதுடன் இரகசியத் தொடர்பிலும் பல அரசியல் பிரபலங்கள் உள்ளனர் அவர்கள் விபரங்களும் இணைக்கப் படும்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தமது ஆதரவு கட்சிகளுடன் (TMVP -EPDP)யுடன் இணைப்பதில் பொதுஜன பெரமுனவின் தேசிய இணைப்பார் பசில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதனை அறிந்த சம்பந்தன் பெரும் அதிர்ச்சியல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனுடன் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனநாயக்கவிடமும் ஒருவர் இணைந்துள்ளார்.
வழமைக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தாவல் இம்முறை அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.