திருமணத்திற்கு பிறகும் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த கணவன்… எடுத்த விபரீத முடிவு

திருமணம் முடிந்த 6 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரஸ்வதி (23) என்கிற இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படிக்கச் வேண்டும் என சரஸ்வதி ஆசைப்பட்டுள்ளார். இதனால் காரைக்குடியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் பிரதாப் சேர்த்து விட்டுள்ளார். அந்த சமயத்தில் சரஸ்வதி கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரஸ்வதி கடந்த 5ம் திகதி வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். அவர் திடீரென வாந்தி எடுப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி நேற்றைக்கு முன்தினம் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சரஸ்வதியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.