சஜித் வெளியிட்ட பகீர் காணொளியால் கலக்கத்தில் பல அரசியல் தலைவர்கள்..

அனுபவமும் திறமையும் உடைய, ஊழல் மோசடிகளில் ஈடுபடாத, தவறான செயல்களுடன் தொடர்புபட்டிருக்காத நபர்களையே நாம் எமது எதிர்கால அரசாங்கத்தின் பங்காளர்களாகத் தெரிவுசெய்வோம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைக் காரணங்காட்டி என்னோடு இணைந்து கொள்வதற்காக நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் பலரும் அவர்களுடைய சுயவிருப்பின் பேரில் என்னுடன் இணைந்துகொண்டார்கள்.

எனினும் யார் என்னுடைய தேர்தல் பிரசார மேடைகளில் ஏறுகின்றார்களோ அவர்கள் அனைவரும் எனது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்கள் என்று கருதக்கூடாது.

பிரதான ஊடகங்களில் மாத்திரமன்றி, சமூகவலைத்தளங்களிலும் முனைப்புடன் செயற்படுவதை வெளிப்படுத்தும் விதமாக சஜித் பிரேமதாச, சமூகவலைத்தள செயற்பாட்டாளருக்கு வழங்கிய குறுகிய நேர்காணலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.

அந்நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.