கருணாவிற்கு நேரம் சரியில்லை போலும்..! சோதனைமேல் சோதனை

விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணாவிற்கு இரண்டு மனைவிகளும் மகிழூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மல்லுக்கட்டிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த பரபரப்பு ஒன்று கருணாவிற்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது இதுவரை கருணாவின் கட்சி செயலாளராக இருந்தவர் கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மானை தெரிந்த அளவிற்கு அம்மானின் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பலருக்கு தெரிந்திருக்காது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற அந்தக்கட்சியின் செயலாளர் கமலதாஸ் என்பவரே, கட்சியிலிருந்து தற்போது ஒதுங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி, எந்த தொடர்பையும் வைத்திருக்காத இவர், தற்போது பொதுஜன பெரமுனவுடன் பேச்சு நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கருணா பெரமுனவின் செல்லப்பைள்ளையாக கூட்டில் இருந்தாலும், சாமிக்கும் எமக்குமிடையில் பூசாரி எதற்கு என கமலதாஸ் நினைத்தாரோ என்னவோ? அவர் கருணாவின் கட்சியில் இருந்து பெரமுனவிற்கு தாவவுள்ளார்.

இந்த நிலையில் கருணாவிற்கு அடுக்கடுக்காக தொடரும் சோதனைகளையடுத்து, அவருக்கு குருப்பெயர்ச்சி சரியில்லையென அவரின் கட்சிக்குள் பேச்சடிபடுகிறதாகவும் தெரியவ்ருகின்றது.