யாழ் வட்டுக்கோட்டையில் திடீரென மாயமான குடும்பப் பெண்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை ஞானசம்பந்தர் வீதி சங்கரத்தையை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

மகேந்திரன் யசோதா என்பவவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த தினத்தன்று அப் பெண் தபாலகத்திற்கும் சமுர்த்தி அலுவலகத்திற்கும் தான் செல்வதாக கூறி காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் வீடுதிரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர் காணாமல் போனமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தபால் நிலையத்திற்கு அருகில் இருந்த CCTV பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது குறித்த பெண் தபால் நிலைய வாயில் வரை வந்தவர் அலுவலகத்திற்குள் நுழையாது திரும்பியமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல்போன பெண் சில சந்தர்ப்பங்களில் மன உளைச்சலான நிலையில் காணப்படுவார் என, அவரது சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் மாயமான பெண் தொடர்பில் மேலதிக விசாரணகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.