தேர்தலிற்கு ஒரு நாள் இருக்கையில்..! கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரின் செயல்! பலரும் அதிர்ச்சி

கொழும்புமாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டதேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான கன்னங்கர, சமூக ஊடகத்தில் சஜித்பிரேமதாசவிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரைபதவியிலிருந்து நீக்கும்படி , அமைச்சரவை தேர்தல்கள்ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சரவைசார்பில், தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுதியகடிதத்தில், தனது உத்தியோகபூர்வ சமூகஊடக பக்கத்தில் சஜித்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்புஅரசாங்க அதிபரின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்திருக்க வேண்டும்.

அவரை பதவியிலிருந்து நீக்கி, புதியவரொருவரை நியமிக்கமேற்கொள்ளப்பட்ட முயற்சியை, தேர்தல் அறிவிக்கப்பட்டதை காரணம்காட்டி, தேர்தல்கள் திணைக்களம் நிறுத்தி வைத்திருந்தது.

இதேவேளை ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரச அதிகாரிகளின் அனைத்துபதவி உயர்வுகளும், இடமாற்றங்களும், பதவி நீக்கல்களும் நிறுத்தப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.