சாம்பார் பாத்திரத்தில் விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.
ஆந்திர பிரதேச மாநிலம் குர்நூல் பகுதியை சேர்ந்தவர் சேம் சுந்தர் ரெட்டி. இவருக்கு 6 வயதில் புருஷோத்தமன் ரெட்டி என்ற மகன் உள்ளார்.
தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த சிறுவன், மதிய உணவு உண்பதற்காக தட்டை எடுக்க முயன்றுள்ளான். அப்போது, அருகில் இருந்த சாம்பார் பாத்திரத்தில் விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில், சிறுவனின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.