புதிய ஜனாதிபதி கோத்தபாயவிடம் கோரிக்கை விடுத்துள்ள சஜித்!

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவிடம் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்,

குறித்த கோரிக்கையில்,

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றதை நாம் கண்டோம். இது கடந்த ஐந்தாண்டுகளில் ஜனநாயக ரீதியில் பெற்ற வெற்றியினதும், ஸ்தாபன மறுசீராக்கல்களினதும் பெறுபேறாகும்.

இதன்மூலம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் கிடைத்ததுடன் சட்டவாட்சியும் நிலைநாட்டப்பட்டது.

இந்த நடைமுறையை முன்னெடுத்துச் சென்று ஜனநாயக நிறுவனங்களையும் பெறுமானங்களையும் மென்மேலும் வலுப்படுத்தி, அவற்றைப் பாதுகாக்குமாறு புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்திய காலப்பகுதியில் அமைதிச் சூழலைப் பேணி, புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களுக்கோ, தமக்கோ இம்சைகள் மேற்கொள்ளப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோத்தபாய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.