மூன்று வருட காதல்… ஒரே கயிற்றில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம்ஜோடி

தெலுங்கானா மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.

தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த புக்கியா ஷிரீஷா மற்றும் லகாவத் மஹிபால் ஆகியோர் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி மூன்று வருடம் தொடர்ந்துள்ளது. சமீபத்தில் இருவரும் தங்களுடைய காதலை பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மனமுடைந்த இருவரும் ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

சனிக்கிழமையன்று சடலத்தையும் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.