புதிய ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரான தனக்கு நெருக்கிய உறவினரை நியமித்துள்ள்ளார்.
குறித்த தகவலை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச, புதிய ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ இன்று சுபநேரத்தில் அனுராதபுரத்தில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






