அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் ரத்து

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில் பொலிஸாரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கண்டியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இலங்கையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் தொடக்கம் அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அவசர கால சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துவதற்கு வசதியாக அனைத்துப் பொலிஸாரின் விடுமுறைகளும் நேற்றைய தினம் முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விடுமுறையில் உள்ள அனைத்து பொலிஸாரும் இன்றைய தினத்துக்குள் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.