யாழில் நேற்று இரவு நடந்த கோர விபத்து! குடும்பத்தலைவர் துடி.. துடிக்க மரணம்

சைக்கிளில் பயணம் செய்த குடும்பஸ்தரை பின்னால் வந்த கார் மோதித்தள்ளியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் கே.கே.எஸ் வீதிக்கு அண்மையாக இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் 45 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றநிலையில் காரை செலுத்திச் சென்ற யாழ்.நகரின் பிரபல நகைக்கடை உரிமையாளர் வாகனத்தை சம்பவ இடத்தில் கைவிட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.