யாழில் சோகத்தை ஏற்படுத்திய பாடசாலை மாணவியின் மரணம்!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிசசை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பயனின்றி உ யிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் இறப்பு விசாரணைகளை மல்லாகம் பிரதேசத்திற்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மோகன் மேற்கொண்டார்.

உ டற்கூற்றுப் ப ரிசோதனை பின்னர் மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை கடந்த சில தினங்களாக யாழில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.