தன்னைத் தீண்டிய பாம்புக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த ஹெட்டிப்பொல, நாகொல்லாகொட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பாம்பின் தலையைக் கடித்து துண்டாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சுகயீனமடைந்த இளைஞரை அவரது உறவினர்கள் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவரால் கடித்து துண்டாக்கப்பட்ட பாம்பையும் உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த இளைஞர் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே அவரை பாம்பு தீண்டியுள்ளது. பாம்பு தன்னை தீண்டிய கோபத்தில் போதையிலிருந்த அந்த இளைஞர் அந்தப் பாம்பைப் பிடித்து அதன் தலையைக் கடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.