ஏ.எச்.எம்.பௌசீ சுதந்திர கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடிய போது, பௌசீயின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இந்த தீர்மானம் குறித்து நாடாளுமன்றிற்கும், தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட காரணத்தினால் இவ்வாறு கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.