ஜனாதிபதி கோட்டாபயவின் அடுத்த அதிரடி நடவடிக்கை.! புதிய அமைச்சர்கள் மீது பாய்ந்த பார்வை

ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் இன்றையதினம் புதிய இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது.

இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சர்களின் தனிப்பட்ட தேவைக்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையை கருத்திக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.