யாழ்ப்பாணத்தில் பேருந்துக்குள் இளம் பெண்ணிடம் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் காரைநகரைச் சேர்ந்த குறித்த யுவதி பணி முடித்து பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் அனைத்துப் பயணிகளும் இறங்கி விட, யுவதி மட்டும் பஸ்ஸில் தனித்து பயணித்துள்ளார்.
இதன்போது பேருந்தின் கதவுகளை மூடிய சாரதியும், நடத்துநரும் தன்னுடன் அத்துமீறி நடக்க முயன்றுள்ளனர்.
இதனையடுத்து கூக்குரல் இட்ட யுவதி அவர்களிடமிருந்து தப்பித்து பேருந்திலிருந்து குதித்து தப்பியோடி வீடு சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரிடம் அவர் தெரிவித்ததை அடுத்து இது தொடர்பில் யுவதி பணிபுரியும் வர்த்தக நிலையத்திற்கும் பெற்றோர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் யுவதியின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.