வவுனியா மதீனாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக பதற்றநிலை!

வவுனியா பூந்தோட்டம் மதீனாநகர் பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று (07.03.2018) அதிகாலை 12.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் டயர் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.

கண்டியில் தற்போது சிங்கள, முஸ்ஸிம் மக்களுக்கிடையே முறன்பாடுகள் ஏற்பட்டு பதட்ட நிலை காணப்படும் இந் நிலையில் இச் சம்பவம் முஸ்ஸிம் மக்களிடையே பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நிதானமாக செயட்படவேண்டியது மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.