புதுப்பெண் தற்கொலை.. கணவரை பழிவாங்க உறவினர்கள் செய்த செயல்..! பின்னர் நிகழ்ந்த சம்பவம்

திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவர் வீட்டு வாசலில் உடலை புதைக்க பெரிய குழி தோண்டப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் முடச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(30).

இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி(24) என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், திருமணமான 4 மாதங்களே ஆன நிலையில், அடிக்கடி கனவன் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான புவனேஷ்வரி கடந்த 18 ஆம் திகதி உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து கொளுத்திக்கொண்டார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் நேற்று நவீன்குமாரின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியின் உடலை புதைக்க முடிவு செய்து, பெரிய குழி ஒன்றை ஜெசிபி எந்திரத்தின் மூலம் தோண்டியுள்ளனர்.

இதனால், நவீன்குமார் குடும்பத்தினர், புவவேன்ஷ்வரியின் உறவினர்கள், குழி தோண்டும்போது, தங்களுடைய பொருட்களை சேதப்படுத்திவிட்டதாக கூறி, பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், புவனேஷ்வரியின் உறவினர்களை, சமாதானப்படுத்தி, புவனேஷ்வரியின் உடலை, அங்கு புதைக்காமல், நேற்று மாலை நவீன்குமார் தோட்டத்தில் புவனேஸ்வரி உடல் பு தைக்கப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையில் புவனேஸ்வரி தற்கொ லை தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.