மகளின் மஞ்சள் நீராட்டு விழா.. போதையில் தாறுமாறாக பேசிய தந்தை..! தாய்மாமன் செய்த கொடூர செயல்..!

வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ரோஸி. இந்நிலையில், இவர்களது மகள் மஞ்சள் நீராட்டுவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் செய்வதற்காக, மோகன்ராஜ் மனைவியின் அண்ணன் ஜோசஃப் என்பவரை அழைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஜோசஃப்பும் தாய் மாமன் சீருடன் மஞ்சள் நீராட்டுவிழாவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், விழா சிறப்பாக முடிந்திருந்த நிலையில், மோகன் ராஜ், மோகன் ராஜின் மனைவி ரோஸி, ஜோசப் உள்ளிட்ட அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயம், மோகன்ராஜ், மது அருந்திய போதையில், தனது மனைவி ரோஸியின் குடும்பத்தை தவறாக பேச, ஆத்திரமடைந்த ரோஸியின் அண்ணன் ஜோசஃப், மோகன்ராஜை அமைதியாக இருக்கும்படி எச்சரித்துள்ளார்.

ஆனால், எதையும் பொருட்படுத்தாது, மோகன்ராஜ், திரும்ப திரும்ப ரோஸியின் குடும்பத்தை தவறாக பேசியுள்ளார்.

இதனால், மிகுந்த கோபமடைந்த ஜோசஃப் அருகிலிருந்த விறகு கட்டையால் கடுமையாக மோகன்ராஜை தாக்கிய நிலையில், மோகன்ராஜ் பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக, மோகன்ராஜை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், கதறி அழுத ரோஸி தன் அண்ணனே, தன் கணவரை அடித்து கொன்று விட்டதாக பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ரோஸி கொடுத்த புகாரின் பேரில் ஜோசப்பைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்