கோர விபத்தில் தாயும் மகளும் பலி

காலி – அஹங்கம வெல்ஹேங்கொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனமும் கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த காரொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.