படுக்கைக்கு அடியில் இருந்த வந்த துர்நாற்றம்… திறந்த பார்த்ததும் பதறிய குழந்தைகள்: சிக்கிய தந்தை

மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக வந்த மனைவியை கொலை செய்து, படுக்கைக்கு அடியில் மறைத்துவைத்திருந்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த லலிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜசர்கேடியில் வசிக்கும் ராஜ்வீரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், லலிதா அங்கிருந்து கோபித்துக்கொண்டு குருகிராமிற்கு சென்றுவிட்டார். ராஜ்வீர் மட்டும் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நவம்பர் 22 அன்று மகன் நிஷாந்தின் பிறந்தநாள் விழா வந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக லலிதா தன்னுடைய கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் குழந்தைகள் இருவரும் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததால், ஆத்திரமடைந்த ராஜ்வீர், லலிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவருடைய சடலத்தை படுக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்துள்ளார். ஆனால் அது தெரியாமல் குழந்தைகளும் அந்த படுக்கைக்கு மேலே படுத்துறங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜ்வீர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தீவிர சோதனை மேற்கொண்டு லலிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது ராஜ்வீர் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.