வடமாகாண ஆளுநராக தமிழரை முடிவு செய்தார் ஜனாதிபதி கோட்டாபய?

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை நியமிப்பது என ஜனாதிபதி கோட்டாபய முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்த சூழ் நிலையில் இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முதளிதரன் கடந்த திங்கட்கிழமை இரவு சந்தித்ததாகவும் அதன்போது வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முரளிதரன் ஏற்றதாகவும் செய்திகள் வெளியாகின….

தற் போது வடமாகாண ஆளுநராக விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.