பிரபல பாடகி சின்மயி நித்தியானந்தா கையில் பிரசாதம் வாங்குவது போன்ற புகைப்படம் தீயாய் பரவி சர்ச்சையினை ஏற்படுத்திய நிலையில், சின்மயி அதற்கான விளக்கத்தினைக் கொடுத்துள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான சின்மயி, தேசிய விருதும் பெற்றார்.
பின்பு பல பாடல்களைப் படி பிரபல பாடகியாக வலம்வந்தார். சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி பரபரப்பினை ஏற்படுத்திய சின்மயி மீடு இயக்கத்தின் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும் பேசி வருகின்றார்.
இந்நிலையில் நித்தியானந்தாவிடம் சின்மயி கோவிலில் பிரசாதம் வாங்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் உண்மையினை புகைப்படமாக வெளியிட்டு பாடகி சின்மயி தெளிவு படுத்தியுள்ளார்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நித்தியானந்தாவுடன் பாடகியா? என்று அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு சின்மயி கொடுத்துள்ள விளக்கம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
I dont why these fans are doing this all over again after I have established that this photo is fake.
Are they doing this for free or is this paid? https://t.co/pHirTu6500 pic.twitter.com/j4GhpRCHGr
— Chinmayi Sripaada (@Chinmayi) November 25, 2019