கண்டி மெனிக்கின்னவில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: மீண்டும் பதற்றம்!

கண்டி, மெனிக்கின்ன பகுதியில் தற்போது பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி நிர்வாக மாவட்டத்திற்குள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதன் காரணமாக இந்த அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதன் பின்னர் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.