தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த முதியவர்.. பரிசோதனையின் போது காத்திருந்த பேரதிர்ச்சி..!

முதியர் ஒருவர் தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு செல்ல பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் தொண்டையில் அட்டை பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் 2 மாதங்களாக தொடர் இருமல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலி தாங்கமால் மருத்துவமனைக்கு செல்ல, அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது இருமலுக்கான காரணத்தை மருத்துவர்கள் அறிந்துள்ளனர். அதன் பின் பிரான்கோஸ்கோபி சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட பிரான்கோஸ்கோபி பரிசோதனையின் போது அவரது உடலில் 2 அட்டைப் பூச்சிகள் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முதியவர் மலைப்பகுதியில் அருவியில் தண்ணீர் அருந்தியபோது, அதில் சிறியதாக இருந்த அட்டைப்பூச்சிகள் அவருடைய உடலுக்குள் சென்று இரண்டு மாதங்களாக இருந்து வளர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சை முடிந்து தற்போது முதியவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.