இலங்கையில் உறவினர்களை பார்க்க வந்த கனடா நாட்டவருக்கு கொழும்பில் நேர்ந்த துயரம்!

ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்த கனடா நாட்டவர் ஒருவர் வைத்தியத்திற்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இலங்கை தனியார் செய்தி ஊடகவியாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சந்திரராஜா என்ற 82 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை (28) அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கனடா நாட்டவர் சிலாபம் பிரதேசத்தில் வசித்து வரும் தனது உறவினர்களை சந்தித்த பின்னர் மீண்டும் கொழும்பு நோக்கி வந்துக் கொண்டிருந்த போது வென்னப்புவ – மிரிஸ்ஸன்கொடுவ பிரதேசத்தில் ரயில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவர் வைத்தியத்திற்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.