கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

காணாமல்போன 18 வயது சிறுமி ஒருவர் நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை – பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்க எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி 27 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மதியம் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.