திருமணம் ஆகி 1 மாதம் கூட ஆகாத நிலையில் 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூர சம்பவம்..!

மும்பையில் ரயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை தள்ளிவிட்டு கணவர் தலைமறைவானதால் பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்தவர் சாகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மற்றொரு பெண்ணான ராணி என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில், ராணி 6 மாத கர்ப்பிணியாக ஆன நிலையில் சாகர் ராணியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, இதை தெரிந்துகொண்ட இவரது முதல் மனைவி, சாகரைவிட்டு பிரிந்து சென்றார்.

இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த சாகர், ராணியிடம் நமக்கு இப்போது இந்த குழந்தை வேண்டாம், உடனே அதை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார்.

இதனால், சாகருக்கும், ராணிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில், அவர்கள் ரயிலில் பயனம் செய்துகொண்டிருந்ததால், ஆத்திரடமடைந்த சாகர், ராணியை ஓங்கி அறைந்துள்ளார்.

இதனால், நிலைதடுமாறிய ராணி, ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

ரயில் மிதமான வேகத்தில் சென்றதால் ராணி உயிரை இழக்காமல் காயங்களுடன் தப்பித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு சாகர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.