புதிய அரசாங்கத்தின் முக்கிய பதவியில் முஸ்லிம் பெண்! யார் தெரியுமா?

நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவையும் நியமிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் முக்கிய அமைச்சின் செயலாளராக ஒரு முஸ்லீம் பெண் இன்று கடமையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருமதி எஸ்.எம் முஹமட் எனும் பெண்மணியே இவ்வாறு புதிய அரசாங்கத்தின் சுற்றுலா மற்றும் விமான அமைச்சகத்தின் புதிய செயலாளர் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

புர்கா அல்லது நிக்காப் எதுவுமின்றி, அடிப்படை இஸ்லாமிய மதவாதத்தில் மூழ்காத முஸ்லிம் பெண்மணியாகவும் எஸ்.எம் முஹமட் திகழ்கின்றார்.

அத்துடன் இன்றைய தினம் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை புதிய காபந்து அரசாங்கத்தில் எந்தவொரு முஸ்லீம்களும் உள்ளீர்க்கப்படவில்லை என பரவலாக விமசனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.