அண்ணன் வழங்கிய நியமனங்களை நிறுத்திய தம்பி

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து முறையற்ற நியமனங்களையும் நிறுத்துமாறு விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிதாக 200 நியமனங்கள் வழங்கப்பட்டிருந்ததாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது, விமான சேவைகள் அமைச்சராக முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கடமையாற்றினார். அவர் தற்போதைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.