மஹிந்தவிடம் சிக்கிய அதிமுக்கிய ஆவணங்கள்! பெரும் அதிர்ச்சியில் ரணில் கும்பல்

ரணில் அரசாங்கத்தின் பல முக்கிய ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் பிரதமா் மஹிந்தவின் கைகளுக்கு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியா கியிருக்கின்றது.

அலரி மாளிகையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தொடர்பான முக்கிய ஆவணங்களே கைப்பற்றப்பட்டுள்ளன. பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில்

பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.அதற்கமைய அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களிடம் இந்த கடிதங்கள் கிடைத்துள்ளன.பிரதமராக ரணில் விக்ரமசிங்க செயற்பட்ட காலப்பகுதியில்

அவரது அமைச்சரவை அமைச்சர்களின் மோசடி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் இந்த கடிதத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.மீட்கப்பட்ட கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்பில் எடுத்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.