சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாக மாறிப்போன இலங்கையின் அவசரகால சட்டம்!

இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ஊடகங்கள் பலவும் குறித்த செய்தியினை முதன்மை படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அவசரகால சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதனை சர்வதேச ஊடகங்கள் பலவும் முதன்மை படுத்தியுள்ளன.

Al Jazeera, சீ.என்.என், The Indian Express, EconomicTimes, The Spectator Index உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் இலங்கையில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமை முதன்மை செய்தியாக இடம்பிடித்துள்ளன.