யாழில் விக்கெட் – இரும்பு கம்பிகளுடன் இரவில் அச்சுறுத்தும் பொலிஸார்! பீதியில் மக்கள்

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு பொற்பதி சந்தியில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் கொட்டன் மற்றும் விக்கெட் போன்றவற்றுடன் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் துப்பாக்கி வைத்திருப்பது யதார்த்தம் ஆனால் கொட்டன், இரும்பு கம்பி எல்லாம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்களா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியும் குறித்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.