மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம்..

சாதாரண தர பரீட்சைக்கு வன பகுதி வீதி ஒன்றினால் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பாம்பு கடித்ததில், மாணவி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்தினை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு பாம்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது நிலைமை கவலைக்கிடமாகவில்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.