சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்! (Video)


வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த இந்த பேரணி கோவில் வீதி ஊடாக கைலாசபிள்ளையார் கோவிலை சென்றடைந்து பின்னர் முதலமைச்சர் அலுவலகம் வரை சென்று அங்கு முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடமாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாக இந்து கலாசார அமைச்சருக்கும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.
ஆதீன முதல்வர்கள், துறவிகள் முன்னிலை வகிக்க சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள், தர்மகத்தா சபைகள் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்