கோட்டபாய இன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு

கல் , மணல் ஆகியவற்றை கொண்டுசெல்லவென வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் நேற்று முதல் இரத்துச் செய்யப்படவுள்ளன .

அமைச்சரவை நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பெரும் வர்த்தகர்கள் இந்த அனுமதிப்பத்திரங்களை எடுத்து சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.