யாழில் சற்று முன்னர் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்! சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!

யாழில் சற்று முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பிய இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…

யாழ் நகர் பகுதியில் இரவு வேளை இயங்கும் உணவகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த எவரோ பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து யாழப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என நேரில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.