மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றுமொரு சம்பவம்! பாலியல் பலாத்காரத்தின் பின்னர் இளம்பெண் எரித்துக்கொலை

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர செய்தி அடங்காத நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள மாந்தோப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை பொலிசார் கைப்பற்றியமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் இளம் பெண்ணின் சடலமொன்று மாந்தோப்பில் எரிந்த நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை சோதனையிட்டதில் அது 20 வயது தக்க இளம்பெண் என்று தெரிந்தது. இது குறித்து பொலிசார் மாந்தோப்பினை ஒட்டியுள்ள பகுதி மக்களை விசாரித்தனர். அதில் சிலர்

” 3 நாட்களுக்கு முன்பு இங்கு அலறல் சத்தம் ஒன்று கேட்டது. ஆனால் அங்கு சென்று பார்த்ததில் யாரும் காணப்படவில்லை என்று கூறினர்.

அவர் எரிக்கப்படுவதற்கு முன்பாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம். சம்பவ இடத்தில் இருந்து செருப்புகளையும், தீ குச்சிகளையும் கைப்பற்றியுள்ளோம். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே பெண்ணின் மரணத்தை குறித்து தெரிய வரும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஹைதராபாத் சம்பவத்தை அடுத்து மேற்கு வங்காளம் நிகழ்வு மக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.