பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மாணவி கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பயின்று வருகிறார். இந்நிலையில் வீட்டில் பெற்றோர்கள் வெளியே சென்ற நேரத்தில் மாணவி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, வட மாநிலத்தை சேர்ந்த நிருபை குமார் என்ற வாலிபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் மாணவி அலறல் சத்தம்போட்டவுடன் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்திருக்கின்றனர். இதனைக் கண்ட அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றிருக்கிறார்.

ஆனால் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், இளைஞர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்துள்ளது. பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.