இலங்கையில் கட­வுச்­சீட்டிற்கு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை வைப்பவர்களிற்கு புதிய சிக்கல்

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை தெரி­வித்தார்.

இது­தொ­டர்பில் அவர் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில்…

தற்­போது சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் இலங்கை கட­வுச்­சீட்டு தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் குறித்த சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம்.

ICAO எனப்­ப­டும்­சர்­வ­தேச சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைப்­பா­னது புதிய கட­வுச்­சீட்­டுக்­கான படம் எப்­படி இருக்க வேண்டும் என்ற வழி­காட்­டு­தல்­களை எல்லா நாடு­க­ளுக்கும் வழங்­கி­யுள்­ளது.

அதன் படி கட­வுச்­சீட்­டி­லுள்ள படத்தில் முகத்தில் எந்­த­வி­த­மான செயற்கை அடை­யா­ளங்­களும் இருக்க முடி­யாது. ஆகையால் நாம் நெற்­றியில் பொட்­டி­ருப்­பதை தவிர்க்­கச்­சொல்­கிறோம்.

கூடு­த­லாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குச்­செல்லும் பெண்­களே பாதிப்­ப­டை­கின்­றனர். அதா­வது பொட்டு உள்ள படத்தை கட­வுச்­சீட்டில் கொண்­டி­ருக்கும் பெண்கள் சில சந்­தர்ப்­பங்­களில் பொட்டு இடாது

சில நாடு­க­ளுக்கு போகும் அவர்­களை சில நாடு­களின் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரிகள் நிறுத்தி வைத்த சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

அது மட்­டு­மன்றி குறித்த நாடு­க­ளுக்­கான விசாக்­களை பெறு­வதும் இவர்­க­ளுக்கு சவா­லா­கவே இருக்­கின்­றன.

இக்­கா­ர­ணங்­களை வைத்து விசாக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. ஆகவே இது அவர்­களின் நன்­மைக்­கா­க­வே­யன்றி வேறு தனிப்­பட்ட கார­ணங்கள் கிடை­யாது. இருப்­பினும் இது தொடர்பில் முரண்­களும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

நாம் இது தொடர்பில் மக்­க­ளுக்கு விளக்­கங்­களை கொடுத்து வரு­கிறோம் என்று தெரி­வித்தார். ஊவா மற்றும் மத்­திய மாகா­ணத்தில் உள்ள தமி­ழர்கள் கண்­டியில் அமைந்­துள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கே சாதா­ரண கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிக்­கச்­செல்வர்.

இந்­நி­லையில் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட­வுச்­சீட்டு பட­மெ­டுக்கும் புகைப்­பட நிலை­யங்­களில் எடுக்­கப்­பட்ட படங்­களை மேற்­படி திணைக்­களம் நிரா­க­ரித்து பொட்­டு­களை தவிர்த்து அங்கு மீண்டும் படமெடுக்க அழுத்தம் கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை நெற்றிப்பொட்டு என்பது தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய அம்சம் என்பதால் அதைத் தவிர்த்து படமெடுப்பதற்கு பெண்கள் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.