முல்லையில் சிரிய மக்களுக்காக நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் சிரியாவில் இடம்பெறும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது 2018.03.03ஆந் திகதி அதாவது இன்றையதினம் காலை 10:00மணியளவில் இடம்பெற்றது.

சிரியாவில் நடைபெறும் மனிதப்படுகொலையை உடன் நிறுத்தக்கோரி ஐ.நா.வைக் கேட்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா – ரவிகரன்,ஆண்டிஐயா புவனேஸ்வரன், சுகிர்தன் ஆகியோரோடு பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக மக்களால் கையெழுத்திடப்பட்ட மகஜர் ஒன்று முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்திலிருந்து ஐ.நா சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.