யாழ்.மக்களுக்கு எச்சரிக்கை… தீவிரமடைந்துள்ள பாரிய ஆபத்து!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களுக்குள் 769 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துள்ளதோடு நோய் பரம்பலும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்த போதிலும் வைத்தியசாலைகளில் தினமும் அதிகளவிலான நோயாளர்கள் டெங்கு நோய் சிகிச்சைக்காக்க அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகளவிலான நோயாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.